மெய் உணர்தல்
351 .
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உமரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
மெய்பொருள் அல்லாதவைகளை மெய்பொருள்என்று தவறாக உணர்கின்ற மயக்க
உணர்வால் சிறப்பிலா துன்பப் பிறவி உண்டாகும்.
|
352 .
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு.
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை
நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும்.
353 .
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ் வுலகைவிட,
அடையவேண்டியமேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
354 .
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை
உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
355 .
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதுஅறிவு.
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்குஉடம்பும் மிகையான பொருள்; ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?
356 .
கற்றூண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றூண்டு வாரா நெறி.
கற்க வேண்டியதைக் கற்று, இங்கு மெய்ப்பொருளை உணர்ந்தவர், மீண்டும் இப்
பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்.
357 .
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு
மீண்டும் பிறப்பு உள்ளதென என்ன வேண்டா.
358 .
பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
பிறவித் துன்பத்திற்குக் காரணமாக அறியாமை நீங்குமாறு, முத்தி என்னும் சிறந்த
நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
359 .
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால்,
சார்வதற்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
360 .
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றினுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால்,
துன்பங்கள் வாராமற் கெடும்.
No comments:
Post a Comment