Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 36

மெய் உணர்தல்
351 . 


பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உமரும்

மருளான்ஆம் மாணாப் பிறப்பு.


மெய்பொருள் அல்லாதவைகளை மெய்பொருள்என்று தவறாக  உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பிலா துன்பப் பிறவி உண்டாகும்.

352 . 


இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசுஅறு காட்சி யவர்க்கு.
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு,   அம் மெய்யுணர்வு  அறியாமையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும்.

353 .
 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.



ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு  பெற்றவர்க்கு அடைந்துள்ள   இவ் வுலகைவிட,  அடையவேண்டியமேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.


354 . 


ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.


மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால்  வளர்ந்த  ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.  

355 . 


எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதுஅறிவு.
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்குஉடம்பும்  மிகையான  பொருள்; ஆகையால் அதற்கு மேல் வேறு  தொடர்பு கொள்வது ஏனோ? 

356 . 


கற்றூண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றூண்டு வாரா நெறி.


கற்க வேண்டியதைக் கற்று, இங்கு மெய்ப்பொருளை  உணர்ந்தவர்,  மீண்டும் இப் பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்.

357 . 


ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.

ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து  உறுதியாக  உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென என்ன வேண்டா.

358 . 


பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
பிறவித் துன்பத்திற்குக் காரணமாக அறியாமை நீங்குமாறு, முத்தி  என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

359 . 


சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து,  பற்றுக்  கெடுமாறு ஒழுகினால், சார்வதற்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

360 . 


காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
 
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றினுடைய  பெயரும்  கெடுமாறு ஒழுகினால், துன்பங்கள் வாராமற் கெடும்.

No comments:

Post a Comment