புகழ்
231 .
ஈதல்
இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம்
இல்லை உயிர்க்கு.
வறியவர்க்கு ஈதல் வேண்டும்.
அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும். அப் புகழ
அல்லாமல் உயிர்க்கு
ஊதியமானது வேறொன்றும் இல்லை.
232 .
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல்
நிற்கும் புகழ்.
புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
233 .
ஒன்றா
உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்
றில்.
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற
ஒரு பொருளாக அழியாமல் நிலை நிற்கவல்லது வேறொன்றும்
இல்லை.
234 .
234 .
நிலவரை
நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது
புத்தேள் உலகு.
நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல
புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ்
செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப்
போற்றாது.
235 .
235 .
நந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்
கல்லால் அரிது.
புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ்
நிலை நிற்பதாகும் சாவும், அறிவில்
சிறந்தவர்க்கு
அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.
236 .
236 .
தோன்றின்
புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று.
ஒரு துறையில் முற்பட்டுத்
தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு
இல்லாதவர் அங்கு
தோன்றுவதை விடத் தோன்றாமலிருப்பது நல்லது.
237 .
237 .
புகழ்பட வாழாதார் தந்நோ வார் தம்மை
இகழ்வாரை
நோவது எவன்.
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்கின்ற வரை நொந்துகொள்ளக் காரணம் என்ன?
238 .
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம்
பெறாஅ விடின்.
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப்
பெறா விட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை
பழி என்று சொல்லுவர்.
239 .
239 .
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை
பொறுத்த நிலம்.
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய
விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
240 .
240 .
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே
வாழா தவர்.
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல்
வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.