Tuesday, January 25, 2011

திருக்குறள் அதிகாரம் 14

ஒழுக்கம் உடைமை  



131 .     ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
             உயிரினும் ஒம்பப் படும்

ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால்  அந்த   ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாக   போற்றப்படும்            


132       பரிந்து ஒம்பிக் காக்க     ஒழுக்கம் தெரிந்து  ஒம்பித்
             தேரினும்  அதே  துணை  


ஒழுக்கத்தை வருந்தியும்  போற்றிக் காக்க வேண்டும்  பலவற்றையும்  ஆராய்ந்து  போற்றித் தெளிந்தாலும் அந்த  ஒழுக்கமே வாழ்கையில்  துணையாக  விளங்கும்

      
133 .   ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம்
            இழிந்த பிறப்பாய் விடும்


ஒழுக்கம் உடையவராக  வாழ்வதே  உயர்ந்த  குடிப் பிறப்பின்  தன்மையாகும்.  ஒழுக்கம் தவறுதல்  இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி  விடும்.


134 .     மறப்பின் ஒத்துக் கொளலாகும்  பார்ப்பான் 
             பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் 

 கற்ற மறைபொருளை  மறந்தாலும்  மீண்டும் அதனை  ஓதிக்  கற்றுக்கொள்ள  முடியும்.  ஆனால் மறை ஓதுவானுடைய குடிபிறப்பு  ஒழுக்கம்  குன்றினால்  கெடும். 


 
135 .  அழுக்காறு உடையான்கான்  ஆக்கம் போன்று  இல்லை 
            ஒழுக்கம்   இலான்கண்  உயர்வு

பொறமை உடையவனிடத்தில்  ஆக்கம் இல்லாதவாறு போல ஒழுக்கம்   இல்லாதவனுடைய  வாழ்கையில்   உயர்வு  இல்லையாகும்.


136 .   ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்  இழுக்கத்தின்  
           ஏதம் படுபாக்கு அறிந்து

 ஒழுக்கம்   தவறுதலால்  குற்றம்  உண்டாவதை அறிந்து  மனவலிமை உடைய  சான்றோர்  ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.  
 

137 .     ஒழுக்கத்தின் எய்துபவர் மேன்மை இழுக்கத்தின்
              எய்துபவர்  எய்தாப்  பழி

ஒழுக்கத்தால்  எவரும்  மேம்பாட்டை  அடைவர்  ஒழுக்கத்திலிருந்து  தவறுதலால் அடையத்  தகாத  பெரும் பழியை  அடைவர்.


138 .  நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்  தீயொழுக்கம்
          என்றும்  இடும்பை  தரும் 

  நல்லொழுக்கம் இன்பமான  நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்.    தீயொழுக்கம்  எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
  
139 .    ஒழுக்கமுடயவர்க்கு   ஒல்லாவே தீய  .
             வழுக்கியும் வாயால்   சொல்லல்.  


தீய சொற்களைத்  தவறியும்  தம்முடைய  வாயால் சொல்லும்  குற்றம்  ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.      
  

140   உலகத்தோடு  ஓட்ட  ஒழுகல்  பலகற்றும் 
         கல்லார்  அறிவிலாதார் 

உலகத்து  உயர்ந்தவரோடு  பொருந்த  ஒழுகும் முறையைக்  கற்காதவர்  பல நூல்களைக்  கற்றிந்த   போதிலும்  அறிவில்லாதவரே ஆவர் .   

திருக்குறள் அதிகாரம் 13

அடக்கம்  உடைமை 
  


121   அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
        ஆரிருள் உய்த்து விடும்.

 அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும் அடக்கம்
 இல்லாதிருத்தல் பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் 
 செலுத்திவிடும்

122 .      காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
            அதனின்  உங்கு இல்லை உயிர்க்கு 

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு   போற்றிக்    காக்க வேண்டும்
அந்த  அடக்கத்தை  விட மேம்பட்ட ஆக்கம் உயிருக்கு இல்லை

123    
          செறிவு  அறிந்து சீர்மை பயக்கும் அறிவு  அறிந்து 
          ஆற்றின்  அடங்கப் பெறின்

அறிய வேண்டியவற்றை  அறிந்து நல்வழியில் அடங்கி ஒழுகப்   பெற்றால் 
அந்த        அடக்கம்  நல்லோரால்  அறியப்பட்டு  மேன்மை பயக்கும்

    
124       
              நிலையில்  திரியாது அடங்கியான் தோற்றம் 
              மலையினும்   மாணப்  பெரிது 

தன்  நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகு வோனுடைய உயர்வு 
மலையின்  உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

           
125     எல்லார்க்கும்  நன்று ஆம் பணிதல்  அவருள்ளும் 
          செல்வர்க்கே   செல்வம்   தகைத்து 

பணிவுடையவராக   ஒழுகுதல்   பொதுவாக   எல்லோருக்கும்  நல்லதாகும் 
அவர்களுள்  சிறப்பாகச்  செல்வர்க்கே  மற்றொரு  செல்வம் போன்றதாகும்.

       
126
     ஒருமையுள்   ஆமை  போல்  ஐந்து      அடக்கம்    ஆற்றின்
        எழுமையும்   ஏமாப்பு  உடைத்து.

ஒரு  பிறப்பில்  ஆமை  போல்  ஐம் பொறிகளையும்  அடக்கியாள  வல்லவனானால்  அது அவனுக்கு பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது

127  

        யாகாவார்     ஆயினும்  நாகாக்க  காவாக்கால் 
           சோகாப்பர்    சொல்லி   ழுக்குப்   பட்டு 

     
காக்க  வேண்டிய வறறுள்     எவற்றைக் காக்க   விட்டாலும்  நாவையாவது  காக்க  வேண்டும்  காக்கத்  தவறினால்  சொற்   குற்றத்தில்   அகப்பட்டுத்  துன்புறுவர் 

  
128    ஒன்றானும்  தீச்சொல்  பொருட்பயன்  உண்டாயின் 
         நன்று  ஆகா  தாகி  விடும்.

தீய  சொற்களின்  பொருளால்  விளையும் தீமை ஒன்றாயினும்  ஒருவனிடம் உண்டானால்  உதணல் மற்ற  அறங்க ளாலும்   நன்மை விளையாமல்  போகும்

129 .          தீயினால்  சுட்ட புண்  உள்ளாறும்  ஆறாதே 
                 நாவினால்   சுட்ட வடு.

தீயினால் சுட்ட புண் புறத்தே  வடு இருந்தாலும்  உள்ளே  ஆறி  விடும் 
ஆனால்  நாவினால்  தீய சொல்  கூறிச்  சுடும் வடு என்றும் ஆறாது

130 .       
                கதம் காத்துக்  கற்று  அடங்கல்  ஆற்று வாள் செவ்வி 
              அறம்   பார்க்கும்   ஆற்றின்  நுழைந்து 

சினம்  தோன்றாமல்  காத்து  கல்வி   கற்று  அடக்க முடையவனாக
இருக்க  வல்லவனுடைய   செல்வியை  அவனுடைய  வழியில் 
சென்று  அறம் பார்த்திருக்கும்.     

திருக்குறள் அதிகாரம் 12

 நடுவுநிலைமை



(111)    தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
            பாற்பட்டு ஒழுகப் பெறின்.

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி
ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும்
அறம் நன்மையாகும்.

(112)    செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
            எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

நடுவுநிலைமை உடையவனின் செல்வலம்
அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும்
உறுதியான நன்மை தருவதாகும்.

(113)    நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
            அன்றே ஒழிய விடல்.

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு
நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே
கைவிட வேண்டும்.

(114)     தக்கார் தகவிலர் என்பது அவரவர்
            எச்சத்தால் காணப் படும்.

நடுவுநிலைமை உடுயவர் நடுவுநிலைமை
இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும்
புகழாலும் பழியாலும் காணப்படும்.

(115)    கெடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
            கோடாமை சான்றோர்க்கு அணி.

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல;
ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல்
இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

(116)    கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
            நடுஒரீஇ அல்ல செயின்.

தன நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய
நினைக்குமாயின், 'நான் கெடப்போகின்றேன்' என்று
ஒருவன் அறிய வேண்டும்.

(117)     கெடுவாக  வையாது உலகம் நடுவாக
             நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து
வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு
என்று கொள்ளாது உலகம்.

(118)    சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்
                                                      அமைந்துஒருபால்                                                         
            கோடாமை சான்றோர்க்கு அணி.

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்
தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல்நடுவுநிலைமை  போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

(119)    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
            உள்கோட்டம் இன்மை பெறின்.

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை
உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல்
இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

(120)    வாணிகம் செய்வார்க்கு வாணிபம் பேணிப்
            பிறவும் தம்போல் செயின்.

பிறர் பொருளையும் தம்பொருள் போல் போற்றிச்
செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய
நல்ல வாணிக முறையாகும்.