Tuesday, January 25, 2011

திருக்குறள் அதிகாரம் 12

 நடுவுநிலைமை



(111)    தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
            பாற்பட்டு ஒழுகப் பெறின்.

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி
ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும்
அறம் நன்மையாகும்.

(112)    செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
            எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

நடுவுநிலைமை உடையவனின் செல்வலம்
அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும்
உறுதியான நன்மை தருவதாகும்.

(113)    நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
            அன்றே ஒழிய விடல்.

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு
நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே
கைவிட வேண்டும்.

(114)     தக்கார் தகவிலர் என்பது அவரவர்
            எச்சத்தால் காணப் படும்.

நடுவுநிலைமை உடுயவர் நடுவுநிலைமை
இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும்
புகழாலும் பழியாலும் காணப்படும்.

(115)    கெடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
            கோடாமை சான்றோர்க்கு அணி.

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல;
ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல்
இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

(116)    கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
            நடுஒரீஇ அல்ல செயின்.

தன நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய
நினைக்குமாயின், 'நான் கெடப்போகின்றேன்' என்று
ஒருவன் அறிய வேண்டும்.

(117)     கெடுவாக  வையாது உலகம் நடுவாக
             நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து
வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு
என்று கொள்ளாது உலகம்.

(118)    சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்
                                                      அமைந்துஒருபால்                                                         
            கோடாமை சான்றோர்க்கு அணி.

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்
தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல்நடுவுநிலைமை  போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

(119)    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
            உள்கோட்டம் இன்மை பெறின்.

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை
உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல்
இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

(120)    வாணிகம் செய்வார்க்கு வாணிபம் பேணிப்
            பிறவும் தம்போல் செயின்.

பிறர் பொருளையும் தம்பொருள் போல் போற்றிச்
செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய
நல்ல வாணிக முறையாகும்.  

No comments:

Post a Comment