Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 133



ஊடலுவகை.



1321

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு,

 1322,
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்

 1323.
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

 1324,
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

 1325.
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

 1326.
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

 1327.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்

 1328.
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் தோன்றிய உப்பு.

 1329.
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

 1330.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.



கற்பியல் முற்றிற்று
காமத்துப்பால் முற்றிற்று.

திருக்குறள் அதிகாரம் 132

புலவி நுணுக்கம்

 1311.
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

 1312.
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடிவாழ் கென்பாக் கறிந்து

 1313
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

 1314.
யாரினும் காதலம் என்றேனோ ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

 1315.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

 1316,
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்

 1317.
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

 1318.
தும்முச் செறுப்ப அழுதாள்  நுமர்உள்ளல்
எம்மை மறைந்திரோ என்று.

 1319.
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரார் ஆகுதிர் என்று.

 1320.
நினைந்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர்
யாருள்ளி நோக்கினீர் என்று,

திருக்குறள் அதிகாரம் 131

புலவி

1301
புல்லா திராஅப் புலத்தை  அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

 1302.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

 1303.
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரை புல்லா விடல்.

 1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி மதலரந் தற்று

 1305.
நலந்தகை நல்லவர்க்கு ஏஎர் புலந்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

 1306.
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

 1307.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.

 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று  அஃதறியும்
காதலர் இல்லா வழி.

 1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது

 1310.
ஊடல் உணங்க விடுவாரொடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.


திருக்குறள் அதிகாரம் 130

நெஞ்சொடுபுலத்தல்

 1291.
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது

 1292 .
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

 1293.
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்

 1294.
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

 1295.
பெறாமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அழாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

 1296.
தனியே இருந்து நினைந்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

 1297.
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

 1298.
எள்ளின் இனிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

 1299.
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி,

 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

திருக்குறள் அதிகாரம் 129

புணர்ச்சிவிதும்பல்

1281        
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திர் குண்டு.

1282.
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்
துணையும் காமம் நிறைய வரின்

1283
பேணாாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்

1284
ஊடற்கண்  சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது  என் னெஞ்சு.

1285
துங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
 காணேன்  தவறல் லவை.

 1287.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து,

 1288.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

 1289.
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படு வார்.

 1290.
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

திருக்குறள் அதிகாரம் 128

குறிப்பறிவுறுத்தல்

  1271,
கரப்பினுங் கைமிகந் தொல்லாதின் உன்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

  1272.
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

  1273,
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு

  1274.
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

  1275.
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

  1276,
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

  1277.
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை,

  1278.
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

  1279.
தொடிநோக்கிச் மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் .தது

  1280.
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

திருக்குறள் அதிகாரம் 127

அவர்வயின்விதும்பல்

 1261.
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாலொற்றித் தேய்ந்த விரல்.

 1262.
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

 1263.
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

 1264.
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொடு ஏறுமென் நெஞ்சு.

 1265.
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

 1266.
வருகமன் கொண்கள் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

 1267.
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரன்

 1268.
வினைகலந்து வென்றீக் வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

 1269.
ஒருநால் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு

 1270.
பெறின்என்றாம் பெற்றக்கால் என்னாம் உறினென்றாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.