Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 94

 சூது

 931.
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

 932.
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

 933,
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

 934.
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவெதொன்று இலி.

 935.
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

 936.
அகடாரார் அல்லல் உழப்பர்கு தென்னும்
முகடியான் மூடப்பட்டார்

 937.
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்

 938.
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.

939,
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஜந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.

940.
இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறுஉம் காதற்று உயிர்.

No comments:

Post a Comment