Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 109


காமத்துப்பால்
களவியல்

தகையணங்குறுத்கல்

  1081.
அணங்குகொல் ஆம்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

  1082,.
நோக்கினான் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

  1083.
பண்டறியேன் கூற்றென் பதனை  இனியறிந்தேன்
பெண்டகையான் பேரமர்க் கட்டு.

  1084
கண்டார் உயுருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

  1085.
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

  1086.
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

  1087.
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

  1088.
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

 1089.
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ எதில தந்து.

  1090.
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

No comments:

Post a Comment