Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 57

வெருவந்தசெய்யாமை





561.
தக்காங்கு நாடிச் தலைச்செல்வா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.


562.
கடிதோச்சி மெல்ல ஏறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.


563.
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.


564.
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

 
565.
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

 
566.
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் பெருஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.


567.
கடுமொழியும் கைமிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.


568.
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.

 
569.
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.


570.
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

 

No comments:

Post a Comment