Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 52

தெரிந்துவிளையாடல்



511.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையால் ஆளப் படும்.


512.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.


513.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.


514.
எனைவகையான்  தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்


515.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று,

516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தொடு
எய்த உணர்ந்து செயல்

517.
இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

 
518.
வினைக் குரிமை  நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் சொல்.

 
519.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.

 
520.
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

No comments:

Post a Comment