Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 115

அலரறிவுறுத்தல்

 1141.
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

 1142.
மலரென்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

 1143,
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

 1144.
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

 1145.
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

 1146.
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

 1147.
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

 1148.
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

 1149.
அலர்நாண ஒல்வதோ அஞ் சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

 1150.
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.

 
களவியல் முற்றிற்று.

No comments:

Post a Comment