Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 80

 நட்பாராய்தல்

 791.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

 792.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்,

 793.
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு.

 794.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு,

 795.
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்

 796.
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்,

 797.
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீ இ விடல்

 798.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

 799.
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

 800.
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பில்லார் நட்பு.


No comments:

Post a Comment