Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 118

கண்விதுப்பழிதல்

 1171.
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண்டது.

கநவி 1172.
தெரிந்துணரா நோக்கிய உன்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

 1173,
கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

 1174.
பெயலாற்றா நீருலந்த உன்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

 1175.
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

 1176.
ஓஓ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற் பட்டது.

 1177.
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்

 1178.
பேணாது பெட்டார் உளர்மன்றோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

 1179.
வாரார்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

 1180.
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

No comments:

Post a Comment