Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 131

புலவி

1301
புல்லா திராஅப் புலத்தை  அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

 1302.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

 1303.
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரை புல்லா விடல்.

 1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி மதலரந் தற்று

 1305.
நலந்தகை நல்லவர்க்கு ஏஎர் புலந்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

 1306.
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

 1307.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.

 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று  அஃதறியும்
காதலர் இல்லா வழி.

 1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது

 1310.
ஊடல் உணங்க விடுவாரொடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.


No comments:

Post a Comment