Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 59

ஒற்றாடல்




581.
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
 
582.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
 
583.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றிங் கொளக்கிடந்தது இல்.
584.
வினைசெய்வார் தம்சசுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
585.
 கடாது உருவொடு கண்ணஞ்சாது மாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
586.
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று..
587.
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
 
588.
ஒற்றோற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
589.
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
590.
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
 





No comments:

Post a Comment