Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 101

 நன்றியில்செல்வம்

 1001.
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

 1002.
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம்  மாணாப் பிறப்பு,

 1003.
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

 1004.
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்

 1005.
கொடுப்பதூஉம்  துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய.
கோடியுண் டாயினும் இல்.

 1006.
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

 1007.
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பஎற்றாள் தமியன்மூத்  தற்று.

 1008.
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

1009.
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

 1010.
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

No comments:

Post a Comment