Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 111

 புணர்ச்சிமகிழ்தல்

  1101.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

  1102.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

  1103.
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

  1104.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

  1105.
வேட்டபொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

  1106.
உறுதோறு உமிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

  1107.
தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்
 அம்மா அரிவை முயக்கு.

  1108.
வீழும் இருவர்க்கு இனிதே வளிமிடை
போழப் படாஅ முயக்கு.

 1109.
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

 1110
அறிதோறு அறியாமை கண்டற்றல்லால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

No comments:

Post a Comment