Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 34

நிலையாமை


331.
நில்லா வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறிவு ஆண்மை கடை.

332.
கூத்தாட்டு அவைக்குழாத் தறே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந்தற்று.

333.
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே ெசயல்.

334.
நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள் அது உணர்வார்ப் பெறின்.

335.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

336.
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

337.
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

338..
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
 உடம்போடு உயிரிடை நட்பு.

339.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு..

340.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

No comments:

Post a Comment