Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 66

வினைத்தூய்மை

 651.
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.

 652.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

 653,
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

 654.
இடுக்கண் படினும் இழிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

 655.
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றென்ன செய்யாமை நன்று.

 656.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

 657.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

 658.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

 659.
அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை..

 660.
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

No comments:

Post a Comment