Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 60

ஊக்கமுடைமை

591.
உடையர் எனப்படுவது  ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.

592.
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

593.
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

594.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

595.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு.

596.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளம் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

597.
சிதைவிடாது ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டுன்றுங் களிறு.

598.
உள்ளம் இலாதவர் ஏய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின்.

 600.
உரமொருவற்கு  உல்ல வெறுக்கை அஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

No comments:

Post a Comment