Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 130

நெஞ்சொடுபுலத்தல்

 1291.
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது

 1292 .
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

 1293.
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்

 1294.
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

 1295.
பெறாமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அழாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

 1296.
தனியே இருந்து நினைந்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

 1297.
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

 1298.
எள்ளின் இனிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

 1299.
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி,

 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

No comments:

Post a Comment