Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 108

கயமை.

   1071.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

  1072.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர்.

  1073.
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

  1074.
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

  1075.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.. 

  1076.
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

  1077.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

  1078.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப்  பயன்படும் கீழ்.

  1079.
உடுப்பதூஉம் உண்பதூம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

  1080.
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.


ஒழிபியல் முற்றிற்று
பொருட்பால் முற்றிற்று


No comments:

Post a Comment