Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 90

பெரியாரைப் பிழையாமை

  891.
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

  892.
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

 893.
கெடல்வேண்டின் கேளது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.

 894.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னாசெயல்

 895.
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

 896,
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

 897.
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்

 898.
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வற் நிலத்து.

 899.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்
 
 900.
இறந்தமைந்த சார்புடையர் ஆயிநும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.


No comments:

Post a Comment