Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 103

குடிசெயல்வகை

 1021.
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

 1022.
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீன்வினையால் நீளும் குடி.

 1023.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.

 1024.
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்ரு பவர்க்கு.

 1025.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

 1026.
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

 1027.
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

 1028.
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.

 1029.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.

 1030.
இடுக்கண்கால்  கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.


No comments:

Post a Comment