Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 84

 பேதைமை



831.
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

832.
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

833.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை ஜெயல்.

834.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

835.
ஒறுமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

836.
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

837.
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பார் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

 838,
மையல் ஒருவன் களித்தற்றால்  பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

 839.
பெரினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்

840.
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.



No comments:

Post a Comment