Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 121

நினைந்தவர்புலம்பல்

1201   
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
 கள்ளினும் காமம் இனிது.

 1202.
எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்.

 1203.
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

 1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

 1205.
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணர்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

 1206.
மற்றுயான் என்னுளேன் மன்னோ அவரொடு இயான்
உற்றநாள் உள்ள உளேன்.

 1207.
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

 1208.
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

 1209.
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

 1210.
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

No comments:

Post a Comment