Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 104

உழவு

 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

 1032.
உழுவார்  உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

 1033.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

 1034.
பலகுடைநீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

 1035.
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

 1036
உழவினார்  கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

 1037.
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப்படும்

 1038.
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் சாப்பு

 1039.
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலத்து
இல்லாளின் ஊடி விடும்.

 1040.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.


No comments:

Post a Comment