Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 53

சுற்றந்தழால்



521.
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

சுற்ரத்தார் கண்ணே உள..

 

522.
விருப்புறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும்.


523.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாத்

கோடின்றித் நீர்நிறைந் தற்று.

 
524.
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்ய

 
525.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.
 

526.
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்குடையார்  மாநிலத்து இல்.


527.
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

 
528.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.


529.
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்

காரணம் இன்றி வரும்.


530.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத் திருந்து எண்ணிக் கொளல்.

No comments:

Post a Comment