Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 110

 குறிப்பறிதல்

 1091.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

  1092.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

  1093.
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

  1094.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும்.

  1095.
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

  1096.
உறாஅ தவர் போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

  1097.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

  1098.
அசைமியற்கு உண்டாண்டோர் எஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

  1099.
ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

  1100.
கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்
சொற்கள் என்ன பயனும் இல.

No comments:

Post a Comment