Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 125

நெஞ்சொடுகிளத்தல்

 1241.
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

 1242.
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

 1243.
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்

 1244
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

 1245.
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்

1246.   
 கலந்துணர்ந்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
 பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு

1247.   
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

1248.   
பரிந்தனர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

 1249
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

1250
துன்்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழந்தும் களின்.

No comments:

Post a Comment