Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 114

நாணுத்துறவுரைத்தல்

  1131.
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடவல்லது இல்லை வலி,

  1132.
நோனா உடம்பும் உமிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

 1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்,

 1134,
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை,

 1135.
தொடலைக் குறுந்தொடி தந்தான் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

 1136.
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்

 1137,
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

 1138.
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

 1139.
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

 1140.
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

No comments:

Post a Comment