Monday, August 7, 2017

திருக்குறள் அதிகாரம் 65

சொல்வன்மை

 641.
நாநலம் என்னும் நலனுடமை அந்நலம்
யாநலத்து உள்ளதூம் அன்று.

 642.
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு,

 643.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

 644.
திறனறிந்து சொல்லுக சொல்லைப அறனும்
பொருளும் அதனின்ஊங்கு இல்.

645.        
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
 வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

646.        
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

647,
சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லாம் யார்க்கும் அரிது.

648.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

649.
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

650.
இணரூழ்த்தூம் நாறா மலரனையர் கற்றது
உணர  விரித்துரையா தார்.


No comments:

Post a Comment