Tuesday, January 25, 2011

திருக்குறள் அதிகாரம் 14

ஒழுக்கம் உடைமை  



131 .     ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
             உயிரினும் ஒம்பப் படும்

ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால்  அந்த   ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாக   போற்றப்படும்            


132       பரிந்து ஒம்பிக் காக்க     ஒழுக்கம் தெரிந்து  ஒம்பித்
             தேரினும்  அதே  துணை  


ஒழுக்கத்தை வருந்தியும்  போற்றிக் காக்க வேண்டும்  பலவற்றையும்  ஆராய்ந்து  போற்றித் தெளிந்தாலும் அந்த  ஒழுக்கமே வாழ்கையில்  துணையாக  விளங்கும்

      
133 .   ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம்
            இழிந்த பிறப்பாய் விடும்


ஒழுக்கம் உடையவராக  வாழ்வதே  உயர்ந்த  குடிப் பிறப்பின்  தன்மையாகும்.  ஒழுக்கம் தவறுதல்  இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி  விடும்.


134 .     மறப்பின் ஒத்துக் கொளலாகும்  பார்ப்பான் 
             பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் 

 கற்ற மறைபொருளை  மறந்தாலும்  மீண்டும் அதனை  ஓதிக்  கற்றுக்கொள்ள  முடியும்.  ஆனால் மறை ஓதுவானுடைய குடிபிறப்பு  ஒழுக்கம்  குன்றினால்  கெடும். 


 
135 .  அழுக்காறு உடையான்கான்  ஆக்கம் போன்று  இல்லை 
            ஒழுக்கம்   இலான்கண்  உயர்வு

பொறமை உடையவனிடத்தில்  ஆக்கம் இல்லாதவாறு போல ஒழுக்கம்   இல்லாதவனுடைய  வாழ்கையில்   உயர்வு  இல்லையாகும்.


136 .   ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்  இழுக்கத்தின்  
           ஏதம் படுபாக்கு அறிந்து

 ஒழுக்கம்   தவறுதலால்  குற்றம்  உண்டாவதை அறிந்து  மனவலிமை உடைய  சான்றோர்  ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.  
 

137 .     ஒழுக்கத்தின் எய்துபவர் மேன்மை இழுக்கத்தின்
              எய்துபவர்  எய்தாப்  பழி

ஒழுக்கத்தால்  எவரும்  மேம்பாட்டை  அடைவர்  ஒழுக்கத்திலிருந்து  தவறுதலால் அடையத்  தகாத  பெரும் பழியை  அடைவர்.


138 .  நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்  தீயொழுக்கம்
          என்றும்  இடும்பை  தரும் 

  நல்லொழுக்கம் இன்பமான  நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்.    தீயொழுக்கம்  எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
  
139 .    ஒழுக்கமுடயவர்க்கு   ஒல்லாவே தீய  .
             வழுக்கியும் வாயால்   சொல்லல்.  


தீய சொற்களைத்  தவறியும்  தம்முடைய  வாயால் சொல்லும்  குற்றம்  ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.      
  

140   உலகத்தோடு  ஓட்ட  ஒழுகல்  பலகற்றும் 
         கல்லார்  அறிவிலாதார் 

உலகத்து  உயர்ந்தவரோடு  பொருந்த  ஒழுகும் முறையைக்  கற்காதவர்  பல நூல்களைக்  கற்றிந்த   போதிலும்  அறிவில்லாதவரே ஆவர் .   

No comments:

Post a Comment