Tuesday, January 25, 2011

திருக்குறள் அதிகாரம் 13

அடக்கம்  உடைமை 
  


121   அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
        ஆரிருள் உய்த்து விடும்.

 அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும் அடக்கம்
 இல்லாதிருத்தல் பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் 
 செலுத்திவிடும்

122 .      காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
            அதனின்  உங்கு இல்லை உயிர்க்கு 

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு   போற்றிக்    காக்க வேண்டும்
அந்த  அடக்கத்தை  விட மேம்பட்ட ஆக்கம் உயிருக்கு இல்லை

123    
          செறிவு  அறிந்து சீர்மை பயக்கும் அறிவு  அறிந்து 
          ஆற்றின்  அடங்கப் பெறின்

அறிய வேண்டியவற்றை  அறிந்து நல்வழியில் அடங்கி ஒழுகப்   பெற்றால் 
அந்த        அடக்கம்  நல்லோரால்  அறியப்பட்டு  மேன்மை பயக்கும்

    
124       
              நிலையில்  திரியாது அடங்கியான் தோற்றம் 
              மலையினும்   மாணப்  பெரிது 

தன்  நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகு வோனுடைய உயர்வு 
மலையின்  உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

           
125     எல்லார்க்கும்  நன்று ஆம் பணிதல்  அவருள்ளும் 
          செல்வர்க்கே   செல்வம்   தகைத்து 

பணிவுடையவராக   ஒழுகுதல்   பொதுவாக   எல்லோருக்கும்  நல்லதாகும் 
அவர்களுள்  சிறப்பாகச்  செல்வர்க்கே  மற்றொரு  செல்வம் போன்றதாகும்.

       
126
     ஒருமையுள்   ஆமை  போல்  ஐந்து      அடக்கம்    ஆற்றின்
        எழுமையும்   ஏமாப்பு  உடைத்து.

ஒரு  பிறப்பில்  ஆமை  போல்  ஐம் பொறிகளையும்  அடக்கியாள  வல்லவனானால்  அது அவனுக்கு பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது

127  

        யாகாவார்     ஆயினும்  நாகாக்க  காவாக்கால் 
           சோகாப்பர்    சொல்லி   ழுக்குப்   பட்டு 

     
காக்க  வேண்டிய வறறுள்     எவற்றைக் காக்க   விட்டாலும்  நாவையாவது  காக்க  வேண்டும்  காக்கத்  தவறினால்  சொற்   குற்றத்தில்   அகப்பட்டுத்  துன்புறுவர் 

  
128    ஒன்றானும்  தீச்சொல்  பொருட்பயன்  உண்டாயின் 
         நன்று  ஆகா  தாகி  விடும்.

தீய  சொற்களின்  பொருளால்  விளையும் தீமை ஒன்றாயினும்  ஒருவனிடம் உண்டானால்  உதணல் மற்ற  அறங்க ளாலும்   நன்மை விளையாமல்  போகும்

129 .          தீயினால்  சுட்ட புண்  உள்ளாறும்  ஆறாதே 
                 நாவினால்   சுட்ட வடு.

தீயினால் சுட்ட புண் புறத்தே  வடு இருந்தாலும்  உள்ளே  ஆறி  விடும் 
ஆனால்  நாவினால்  தீய சொல்  கூறிச்  சுடும் வடு என்றும் ஆறாது

130 .       
                கதம் காத்துக்  கற்று  அடங்கல்  ஆற்று வாள் செவ்வி 
              அறம்   பார்க்கும்   ஆற்றின்  நுழைந்து 

சினம்  தோன்றாமல்  காத்து  கல்வி   கற்று  அடக்க முடையவனாக
இருக்க  வல்லவனுடைய   செல்வியை  அவனுடைய  வழியில் 
சென்று  அறம் பார்த்திருக்கும்.     

No comments:

Post a Comment