அடக்கம் உடைமை
121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும் அடக்கம்
இல்லாதிருத்தல் பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில்
செலுத்திவிடும்
122 . காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் உங்கு இல்லை உயிர்க்கு
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும்
அந்த அடக்கத்தை விட மேம்பட்ட ஆக்கம் உயிருக்கு இல்லை
123
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
அறிய வேண்டியவற்றை அறிந்து நல்வழியில் அடங்கி ஒழுகப் பெற்றால்
அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்
124
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகு வோனுடைய உயர்வு
மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
125 எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
பணிவுடையவராக ஒழுகுதல் பொதுவாக எல்லோருக்கும் நல்லதாகும்
அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.
126
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கம் ஆற்றின்
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கம் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
ஒரு பிறப்பில் ஆமை போல் ஐம் பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால் அது அவனுக்கு பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது
127
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லி ழுக்குப் பட்டு
காக்க வேண்டிய வறறுள் எவற்றைக் காக்க விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும் காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்
128 ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்று ஆகா தாகி விடும்.
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால் உதணல் மற்ற அறங்க ளாலும் நன்மை விளையாமல் போகும்
129 . தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறி விடும்
ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது
130 .
கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்று வாள் செவ்வி
கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்று வாள் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து
சினம் தோன்றாமல் காத்து கல்வி கற்று அடக்க முடையவனாக
இருக்க வல்லவனுடைய செல்வியை அவனுடைய வழியில்
சென்று அறம் பார்த்திருக்கும்.
No comments:
Post a Comment