Monday, February 27, 2012

திருக்குறள் அதிகாரம் 15

பிறன்இல் விழையாமை  


141.  

பிறன் பொருளால்   பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள்  கண்டார்கண் இல். 

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை  உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடும் இல்லை 


142. 

அறன் கடை  நின்றாருள் எல்லாம்  பிறன் கடை 
நின்றாரின்  பேதையார் இல். 

அறத்தை  விட்டுத்  தீநெறியில் நின்றவர்  எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப்  போல் அறிவிலிகள் இல்லை

143. 

விளிந்தாரின்  வேறு  அல்லர்  மன்ற தெளிந்தாரில் 
தீமை  புரிந்து  ஒழுகுவார் 


ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரை விட  வேறுபட்டவர்    அல்லர்.

144.

எனைத்துணையர்  ஆயினும்  என் ஆம்? தினைத்துணையும் 
தேரான்  பிறனில்  புகல்

               
  தினையளவும்  ஆராய்ந்து  பார்க்காமல்  பிறனுடைய மனைவியிடம்
செல்லுதல்  எவ்வளவு  பெருமையை உடையவராயினும்  என்னவாக  முடியும்?

145.

 எளிது  என  இல்லிறப்பான்  எய்தும்  எய்ஞான்ரும்      
 விளியாது  நிற்கும்  பழி

இச்  செயல்  எளியது  என  எண்ணிப்  பிறனுடைய  மனைவியிடம்   நெறி  தவறிச்  செல்கின்றவன்  எப்போதும்  அழியாமல் நிலை  நிற்கும்  பழியை  அடைவான்     


146. 

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.


பகை பாவம் அச்சம் பழி என்னும் இந் நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
 
 
147.  
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
 
 
 
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.  
 
 
 
148. 
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
 
 
 
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
 
 
 
149. 

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்
 
 
 
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே  ஆவார்.
 
 
150.  
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
 
 
 
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின்  பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது. 

No comments:

Post a Comment