புறங்கூறாமை
181 . அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது
இவன் அறத்தை போற்றி கூறாதவனாய் அறமல்லாதவற்றை செய்தாலும் மற்றவனைப் பற்றி புறம் கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
182 . அறன் அழிஇ அல்லவை செய்தலின் தீதே
புறன் அழி இப் பொய்த்து நகை
அறத்தை அழித்து பேசி அரமல் லா தவைகளைச் செய்தலை விட
ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமல்ர்ந்து பேசுதல் தீமையாகும்
183 . புறம் கூறிப் பொய்த்து உயி ர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும்
புறங் கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட அவ்வாறு செய்யாமல் வறுமை உற்று இறந்து விடுதல் அற நூல்கள் சொல்லும் ஆக்கத்தை தரும்.
184 . கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க்
முன் இன்று பின் நோக்கா ச் சொல்
எதிரே நின்று கண் ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும்
சொல்லலாம் நேரில் இல்லாத போது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது
185 . அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும்
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை ஒருவன் மற்றவனைப் பற்றி புறம் கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
186 . பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப்படும்.
மற்றவனைப் பற்றி புறம் கூறுகின்றவன் அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவைகளை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
187 . பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
மகிழும்படியாக பேசி நட்பு கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும் படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
188 . துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்கு.
நெருங்கி பழகியவரின் குற்றத்தையும் புறம் கூறித் தூற்றும் இயல்புடையவர் பழகாத அயலார்ரிடத்து என்ன செயவார்ரோ
189 . அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை ' இவனையும் சுமப்பதே எனக்கு அறம்' என்று கருதி நிலம் சுமகின்றதோ ?
190 ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிற்கு.
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தை யும் காண வல்லவரானால் நிலை பெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ
No comments:
Post a Comment