Friday, March 2, 2012

திருக்குறள் அதிகாரம் 19

 
 
புறங்கூறாமை   
 
 
181 .    அறம்  கூறான் அல்ல  செயினும் ஒருவன் 
             புறம்  கூறான்  என்றல்  இனிது 
 
 
இவன் அறத்தை  போற்றி கூறாதவனாய் அறமல்லாதவற்றை  செய்தாலும்  மற்றவனைப் பற்றி புறம் கூறாமல் இருக்கிறான்  என்று  சொல்லப்படுதல்  நல்லது. 
 
 
182 .     அறன் அழிஇ  அல்லவை  செய்தலின்  தீதே
              புறன்      அழி இப்    பொய்த்து  நகை 
 
 
  அறத்தை அழித்து பேசி அரமல் லா தவைகளைச்   செய்தலை விட 
ஒருவன்  இல்லாதவிடத்தில்  அவனைப் பழித்துப்  பேசி  நேரில் பொய்யாக முகமல்ர்ந்து  பேசுதல்  தீமையாகும்    
 
 
183 .    புறம் கூறிப் பொய்த்து உயி ர்  வாழ்தலின் சாதல்  
             அறம் கூறும் ஆக்கம்  தரும்
 
 
   புறங் கூறிப் பொய்யாக நடந்து உயிர்  வாழ்தலை விட  அவ்வாறு  செய்யாமல்  வறுமை   உற்று இறந்து விடுதல்  அற  நூல்கள்  சொல்லும்  ஆக்கத்தை  தரும்.
 
 
 
184 .     கண்  நின்று  கண் அறச்  சொல்லினும்  சொல்லற்க்
              முன் இன்று  பின் நோக்கா ச்  சொல் 
 
 
எதிரே  நின்று  கண் ணோட்டம்  இல்லாமல் கடுமையாகச்  சொன்னாலும் 
சொல்லலாம்  நேரில்  இல்லாத போது பின் விளைவை  ஆராயாத சொல்லைச்  சொல்லக்கூடாது 
                        
 
185 .    அறம் சொல்லும்  நெஞ்சத்தான்  அன்மை  புறம் சொல்லும்   
             புன்மையால்  காணப்படும்
 
 
அறத்தை நல்லதென்று  போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை ஒருவன் மற்றவனைப்  பற்றி  புறம் கூறுகின்ற  சிறுமையால்  காணப்படும். 
 
 
 
186 .     பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
             திறன்தெரிந்து கூறப்படும்.
 
 
மற்றவனைப்  பற்றி  புறம் கூறுகின்றவன்  அவனுடைய பழிகள் பலவற்றிலும்   நோகத்தக்கவைகளை  ஆராய்ந்து  கூறிப் பிறரால்  பழிக்கப்படுவான்.  
 
 
187 .      பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
              நட்பாடல் தேற்றா தவர்.
 
 
மகிழும்படியாக  பேசி நட்பு கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை  விட்டு நீங்கும் படியாகப் புறம் கூறி  நண்பரையும்  பிரித்து  விடுவர். 
 
 
188 .     துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
             என்னைகொல் ஏதிலார் மாட்கு.
 
 
நெருங்கி  பழகியவரின்  குற்றத்தையும் புறம் கூறித்  தூற்றும்  இயல்புடையவர்  பழகாத  அயலார்ரிடத்து  என்ன செயவார்ரோ 
 
 
189 .      அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
              புன்சொல் உரைப்பான் பொறை.
 
 
ஒருவர் நேரில் இல்லாதது  கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை ' இவனையும் சுமப்பதே எனக்கு அறம்'    என்று கருதி நிலம் சுமகின்றதோ ?
 
 
190        ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
              தீதுண்டோ மன்னும் உயிற்கு.

 
அயலாருடைய  குற்றத்தைக் காண்பது  போல் தம் குற்றத்தை யும்  காண வல்லவரானால் நிலை பெற்ற  உயிர்  வாழ்க்கைக்குத்  துன்பம்  உண்டோ      

No comments:

Post a Comment