Tuesday, March 6, 2012

திருக்குறள் அதிகாரம் 21

தீவினை அச்சம்


201.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவார்
தீவினை என்னும் செருக்கு.
    
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை  உடைய பாவிகள் அஞ்சார்;  தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
 
 
202 . 
       தீயவை தீய பயத்தலாலான் தீயவை
 தீயினும் அஞ்சப் படும்.


தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையவனாக இருத்தலால்,  அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
 
 
203 .  
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.


தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச்  செய்யாமலிருத்தலை, அறிவு  எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறப்படும். 
 
 
204 .
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பிறனுக்கு கேட்டைத் தரும் தீயசெயல்களை ஒருவன்மறந்தும்  எண்ணக்  கூடாது.  எண்ணினால்  எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு  அறம்  எண்ணும்.  
205  
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
யான் வறியவன்' என்று நினைத்துத் தீயசெயல்களைச்  செய்யக்கூடாது; செய்தால்  மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.   



206 .  
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேன்டா தான்.


துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன்,  தீய செயல்களைத் தான் பிறருக்குச்  செய்யாமலிருக்க வேண்டும்.
 
 
207 .  
எனைப்பகை யுற்றாகும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீ- வினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
 
 
 
208 .  
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது பின்சென்று அடும்.

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல் ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது. 



209 .  
தன்னைத்தான் காதலனாமின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினை பால்.
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழபவனாயின்,தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
 
 
210 . 
அருங்கேடன் என்பது  அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.


ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல் செய்யாதிருப்பானானால்  அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.  

No comments:

Post a Comment