கல்லாமை
401.
அரங்கின்றி வட்டாடி மற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
402.
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்காமுற் றற்று.
403.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
404.
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அரிவுடை
யார்.
405.
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
406.
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையார் கல்லா தவர்.
407.
நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மான் புனைபாவை யற்று.
408.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
409.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
410.
விலங் கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
No comments:
Post a Comment