Thursday, June 29, 2017

திருக்குறள் அதிகாரம் 46



சிற்றினஞ்சேராமை.

 

451.
சிற்றினம் அஞ்சம் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடு்ம்.

 

452.
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.

 

453.
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படும் செயல்.

 

454.
மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துளது ஆகும் அறிவு.

 

455.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.

 

456.
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.

 

457.
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.

 

458.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து.

 

459,
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இநநலத்தின் ஏமாப் புடைத்து.

 

460.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூம் இல்.

 

No comments:

Post a Comment