Thursday, June 29, 2017

திருக்குறள் அதிகாரம் 48



வலியறிதல்

 

471.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துமைவலியும் தூக்கிச் செயல்.

 

472.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

 

473.
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்

 

474அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

 

475. பீவிபெம் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.

 

476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.

 

477. ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.

 

478. ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை.

 

479., அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

 

480.உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

No comments:

Post a Comment