Thursday, June 29, 2017

திருக்குறள் அதிகாரம் 47



தெரிந்துசெயல்வகை

 

461.
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.

 

462.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்,

 

463.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடையார்.

 

464.
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்

 

465.
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.

 

466.
செயதக்க அல்ல செயக் கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

 

467.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

 

468.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.

 

469.
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை.

 

470.
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு.

 

No comments:

Post a Comment