Thursday, June 29, 2017

திருக்குறள் அதிகாரம் 42


கேள்வி

 

411.
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.

 

412.
செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப்படும்.

 

413.
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்ராரோ டொப்பர் நிலத்து..

 

414,
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

 

415.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

 

416.
எனைத்தானும் நல்லவை கேட்கஅனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

 

417.
பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர்.

 

418.
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

 

419.
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயினராதல் அரிது.

 

420.
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்.

No comments:

Post a Comment