Saturday, July 27, 2013

திருக்குறள் அதிகாரம் 31

வெகுளாமை

301.
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.

பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம்
காப்பவன்; பலிக்காத இடத்தில் காத்தால் என்ன?
காக்கா விட்டால் என்ன?

302.
செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்
இல்அதனில் தீய பிற.

பலிக்காத இடத்தில் (தன்னைவிட வலியவரிடத்தில்)
சினம் கொள்வது தீங்கு; பலிக்கும் இடத்திலும் (மெலியவ
ரிடத்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

 
303.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
 
யாரிடத்திலும் சினங் கொள்ளாமல் அதை மறந்துவிட
வேண்டும்; தீமையான விளைவுகள் அந்தச்
சினத்தாலாயே ஏற்படும். 


304.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
 
முகமகிழ்ச்சியையும்  அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற
சினத்தைவிட ஒருவனுக்கு பகையானவை வேறு
உள்ளனவோ? 


305.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
 
ஒருவன் தன்னைத் தான்  காத்துக் கொள்வதானால்,
சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்;
காக்கா விட்டால், சினம் தன்னையே அழித்துவிடும். 


306.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
 
சினம் என்று சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு,
ஒருவனுக்கு இனம் என்னும் இன்பத் தெப்பத்தையும்
சுட்டழிக்கும்.


307.
சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று.

(தன வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப்
பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை
அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும். 

308,
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை  நன்று.
 
பல சுடர்களை உள்ள பெருநெருப்பில் தோய்வது
போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமா
னால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் ஆகும்.


309.
உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
 
ஒருவன்  தன் மனத்தால் சினத்தை எண்ணா
திருப்பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம்
அவன் ஒருங்கே பெறுவான்.


310.
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப்
போன்றவர்; சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவார்.

No comments:

Post a Comment