Monday, July 29, 2013

திருக்குறள் அதிகாரம் 32

இன்னாசெய்யாமை

311.
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.

சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப்
பெறுவதாக   இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யா
திருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்

 
312.
கறுத்துஇன்ன செய்தஅக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.
 
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும்
அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே
மாசற்றவரின் கொள்கையாம்.  


313.
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்..
 
தான் ஒன்றும் செயாதிருக்கத் தனக்குத் தீங்கு
செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த
பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.


314.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
 
தான் ஒன்றும் செயாதிருக்கத் தனக்குத் தீங்கு
செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த
பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.


315.
அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை,.

மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம் போல்
கருதி காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் 
ஆகும் பயன் உண்டோ? 
 
 
316.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறந்கண் செயல்.
 
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில்
கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல்
தவிர்க்க வேண்டும்.


317.
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்
மாணாசெய் யாமை தலை.

எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும்
எவரிடத்திலும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற
துன்பச் செயல்களைச் செய்யாதிருத்தலே சிறந்தது.
 

318.
தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் எந்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
 
தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று
உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத் துன்பங்களைச்
செய்தல் என்ன காரணத்தாலோ?
 

319,
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
 
முற்பகலில்   மற்றவர்க்குத் துன்பமானவற்றைச்
செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில்
துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்.


320.
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோசெய்யார்
நோய்இன்மை வேண்டு பவர்.

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன;
ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்வதை விரும்பு
கின்றவர், பிறர்க்கே துன்பம் செய்யார்.


No comments:

Post a Comment